#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Sunday 20 November 2016

கம்பராமாயணம்


ஆசிரியர் குறிப்பு:
  • பெயர் = கம்பர்
  • ஊர் = சோழநாட்டு திருவழுந்தூர்
  • தந்தை = காளி கோவில் பூசாரியான ஆதித்தன்
  • மகன் = அம்பிகாபதி
  • மகள் = காவிரி
ஆசிரியரின் சிறப்பு பெயர்:
  • கவிச்சக்ரவர்த்தி
  • கவிப்பேரரசர்
  • கவிக்கோமான்
  • கம்பநாடுடைய வள்ளல்
இவரின் படைப்புகள்:
  • ஏர் எழுபது
  • சிலை எழுபது
  • திருக்கை வழக்கம்
  • சரஸ்வதி அந்தாதி
  • சடகோபர் அந்தாதி(நம்மாழ்வார் பற்றியது)
கம்பராமாயணத்தின் சிறப்பு பெயர்கள்:
  • கம்பசித்திரம்
  • கம்பநாடகம்
  • தோமறுமாக்கதை
  • இயற்கை பரிணாமம்
நூல் அமைப்பு:
  • காண்டம் = 6
  • படலம் = 113
  • மொத்த பாடல்கள் = 10569
  • முதல் படலம் = ஆற்றுப்படலம்
  • இறுதிப்படலம் = விடை கொடுத்த படலம்
காண்டங்கள்:
  • பால காண்டம்
  • அயோத்தியாகாண்டம்
  • ஆரண்யகாண்டம்
  • கிட்கிந்தா காண்டம்
  • சுந்தர காண்டம்
  • யுத்தகாண்டம்
  • ஏழாவது காண்டம் ஒட்டக்கூத்தர் பாடிய “உத்தர காண்டம்”


சிறப்பு:
  • மு.இராகவையங்கார் = “வடமொழி தென்மொழிக் காப்பிய நயங்களாகிய பொன் மையில் தம் சித்திரக்கோலைத் தோய்த்துத் தம் கப்பிய ஓவியத்தைக் கம்பநாடார் வரைந்தார்".
  • வ.வே.சு.ஐயர் = “கம்பயராமாயணம் தனக்கு முதல் நூலான வான்மீகி இராமாயணத்தையே விஞ்சும் சுவையுடைய காப்பியமாகும்”
  • எஸ்.மகாராஜன் = “உலகத்திலேயே வேறொரு நாட்டில், இவ்வளவு பழமையான கவிஞன் இருபதாம் நூற்றாண்டு மக்களுடைய மனதை இப்படி ஆட்கொண்டதில்லை”
  • பாரதியார் = “கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு” என்கிறார்.
  • பாரதியார் = “கம்பனைப் போல் வள்ளுவன் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை” என்கிறார்.
  • கவிமணி = “வீசும் தென்றல் காற்றுண்டு – கையில் கம்பன் கவியுண்டு” என்கிறார்.
  • கல்வியிற் பெரியவர் கம்பர்”
  • கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்”
  • கம்ப நாடன் கவிதையிற்போல் கற்றோருக்கு இதயம் களியாதே”
  • விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்”
  • தமிழுக்கு கதி = கம்பர், திருவள்ளுவர்
  • 96 வகை ஓசை வகைகளை கம்பர் கையாண்டுள்ளார்.
பொதுவான குறிப்புகள்:
  • கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் = இராமாவதாரம்
  • கம்பர் இறந்த இடம் = நாட்டரசன் கோட்டை
  • கம்பரின் சமாதி உள்ள இடம் = நாட்டரசன் கோட்டை
  • வான்மீகி எழுதாத “இரணியன் வதைப் படலம்” கம்பராமாயணத்தின் மிக சிறந்த பகுதியாக கருதப்படுகிறது.
  • கமபராமாயணம் ஒரு வழி நூல்
  • கம்பர் தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலை 1000 பாடல்களுக்கு ஒருமுறை பாடியுள்ளார்.
  • கம்பர் தன் காப்பியத்தை அரங்கேற்றிய இடம் = திருவரங்கம்
  • கம்பருக்கு தமிழக அரசு திருவழுந்தூரில் மணி மண்டபம் அமைத்து சிறப்பித்துள்ளது.
  • இவர் மூன்றாம் குலோத்துங்கனின் அவை களப் புலவர் ஆவார்.
  • இவரின் மகன் அம்பிகாபதி சோழன் மகளை காதலித்ததில் ஏற்பட்ட பிரச்சனையில் அம்பிகாபதி, அமராவதி இருவரின் உயிர் நீங்க, இவர் சோழ நாட்டை விட்டு வெளியேறினார்.
  • 15 நாட்களில் கம்பராமாயாணம் முழுவதும் எழுதி முடித்தார்(10569 பாடல்கள்)

மேற்கோள்:

  • தாதகு சோலை தோறும் செண்பகக் காடு தோறும்
  • எல்லோரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தாலே
  • இல்லாரும் இல்லை உடையாரும்
  • இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினர்
  • அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினால்
  • இன்று போய் நாளை வா
  • வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்
  • வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
  • உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்
  • கை வண்ணம் அங்குக் கண்டேன்
    கால் வண்ணம் இங்குக் கண்டேன்
  • அன்றலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா