#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Sunday 20 November 2016

இன்னா நாற்பது

இன்னா நாற்பதின் உருவம்:
  • ஆசிரியர்       = கபிலர்
  • பாடல்கள்      = 1 + 40
  • பாவகை        = வெண்பா
பெயர்க்காரணம்:
  • இன்னா = துன்பம். இன்னது இன்னது இன்னா என நாற்பது பாடல்களில் கூறுவதால்  இன்னா நாற்பது எனப்படுகிறது.
கடவுள் வாழ்த்து:
  • கடவுள் வாழ்த்தில் சிவன், பலராமன், திருமால், முருகன் என்னும் நான்கு கடவுளரையும் வணங்காமை துன்பம் எனக் கூறுகிறார்.
பொதுவான குறிப்புகள்:
  • இந்நூல் துன்பம் கொடுக்கும் செயல்களை தொகுத்துக் கூறும் நூல்.
  • இந்நூல் அம்மை என்ற வனப்பிற்கு உரியது.
  • கபிலரிடம் சைவவைணவ பேதம் இல்லை.
  • சங்க கால கபிலரும், இவரும் வேறு வேறு.
  • இந்நூலில் 164 இன்னாத செயல்கள் கூறப்பட்டுள்ளன.
ஐந்து கபிலர்:
  • பாரி மன்னனை பாடிய சங்கக் கபிலர்
  • இன்னா நாற்பது பாடிய கபிலர்
  • பதினொன்றாம் திருமுறையில் கூறப்படும் கபிலதேவநாயனார்
  • பன்னிரு பாட்டிலில் சில பாடல்களை பாடிய கபிலர்
  • அகவற்பா பாடிய கபிலர்.
முக்கிய அடிகள்:
  • உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்புஇன்னா
  • தீமையுடையார் அருகில் இருத்தல் இன்னா
  • ஊனைத் தின்று ஊனைப்பெருக்கல் முன்னின்னா
  • குழவிகள் உற்றபிணி இன்னா
  • இன்னா பொருள் இல்லார் வண்மை புரிவு