#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Sunday 20 November 2016

குறிஞ்சிப்பாட்டு

குறிஞ்சிப்பாட்டின் உருவம்:
  • திணை             = குறிஞ்சித்திணை
  • பா வகை         = ஆசிரியப்பா
  • அடி எல்லை    = 261
வேறு பெயர்கள்;
  • பெருங்குறுஞ்சி(நச்சினார்கினியர், பரிமேழலகர்)
  • களவியல் பாட்டு
புலவர்:
  • பாடிய புலவர் = கபிலர்
  • ஆரிய அரசன் பிரகதத்தனுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதற்காக
அறத்தோடு நிற்றல் துறையின் நிலைகள்:
  • எளித்தல்
  • ஏத்தல்
  • வேட்கை உரைத்தல்
  • ஏதீடு
  • தலைப்பாடு
  • உண்மை செப்பும் கிளவி
  • கூறுதல் உசாதல்
பொதுவான குறிப்புகள்:
  • ஆரிய அரசன் பிரகதத்தனுக்கு தமிழ் அகப்பொருள் மரபை அறிவுறுத்த கபிலர் இயற்றியது.
  • அறத்தோடு நிற்றல் துறையில் இயற்றப்பட்டுள்ளது.
  • கோவை நூல்களுக்கு குறிஞ்சிப்பாட்டு வழிக்காட்டியது என்பர்.
  • 99 வகையான மலர்களை கபிலர் குறிப்பிட்டுள்ளார்
  • தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்கள் தான் முதன் முதலில் குறிஞ்சிப்பாட்டின் ஏடுகளை திரட்டி ஒழுங்குப்படுத்தி பதிப்பித்தார்.
  • இம்மலர்க் குவியலை 34 அடிகளில் உரைத்தமையால் கபிலர் இயற்கையை வருணிப்பதில் உலகிலேயே தலைச்சிறந்தவர் ஆகிறார்” எனத் தனிநாயகம் அடிகள் பாராட்டுகிறார்.
முக்கிய அடிகள்:

  • முத்தினும்மணியினும் பொன்னினும் அத்துணை
    நேர்வரும் குரைய களம் கொடின் புணரும்
    சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின்
    மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்தல்
    ஆசறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை
    எளிய என்னார் தொல்மருங்கு அறிஞர்
  • இகல்மீக் கடவும் இருபெரும் வேந்தர்
    வினையிடை நின்ற சான்றோர் போல
    இருபேர் அச்சமோடு யானும் ஆற்றலோன்