#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Sunday 20 November 2016

ஐந்திணை ஐம்பது

ஐந்திணை ஐம்பதின் உருவம்:
  • ஆசிரியர் = மாறன் பொறையனார்
  • பாடல்கள் = 50(5 X 10 = 50)
  • திணை = ஐந்து அகத்திணை
  • திணை வைப்பு முறை = முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல்
  • பாவகை = வெண்பா
பெயர்க்காரணம்:
  • ஐந்து தினைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் ஐம்பது பாடல்கள் பாடப்பட்டதால் ஐந்திணை ஐமபது எனப் பெயர் பெற்றது.
பொதுவான குறிப்புகள்:
  • முல்லைத் தினையை முதலாவதாக கொண்ட பதினெண்கீழ்க்கணக்கு இது மட்டுமே ஆகும்.
  • இந்நூலின் பாயிரத்தில், கூறப்படுவது.
ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார்
செந்தமிழ் சேராதவர்
  • நச்சினார்கினியரரும், பேராசிரியரும் தங்கள் உரையில் இந்நூலின் பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளனர்
  • தொல்காப்பியர் கூறாத பாலைத்திணை நான்காவதாக வைத்துப் பாடப்பட்டுள்ளது.
முக்கிய அடிகள்:
  • வெஞ்சுடர் அன்னானையான்கண்டேன் கண்டாளாம்
  • தண்சுடர் அன்னாளைத் தான்
  • சுனைவாய்ச் சிறுநீரை எய்தாது என்று எண்ணிப்
  • பிணைமான் இனிது உண்ண வேண்டிக் கலைமான்தன்
  • கள்ளத்தின் ஊச்சம் கரம் என்பர் காதலர்
  • உள்ளம் படர்ந்த நெறி