#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Sunday 20 November 2016

அகநானூறு


அகநானூற்றின் உருவம்:
  • திணை   = அகத்திணை
  • பாவகை = ஆசிரியப்பா
  • பாடல்கள்      = 400
  • பாடியோர்      = 145
  • அடி எல்லை    = 13-31
பெயர்க்காரணம்:
  • அகம் + நான்கு + நூறு = அகநானூறு
  • அகத்திணை பற்றிய நானூறு பாடல்கள் கொண்டுள்ளதால் அகநானூறு எனப் பெயர் பெற்றது.
வேறு பெயர்கள்:
  • அகம்
  • அகப்பாட்டு
  • நெடுந்தொகை
  • நெடுந்தொகை நானூறு
  • நெடும்பாட்டு
  • பெருந்தொகை நானூறு
தொகுப்பு:
  • தொகுத்தவர் = உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மனார்
  • தொகுப்பித்தவர் = பாண்டியன் உக்கிர பெருவழுதி
உரை, பதிப்பு:
  • நூலிற்கு முதலில் உரை எழுதியவர் = நா.மு.வேங்கடசாமி நாட்டார்
  • நூலை முதலில் பதிப்பித்தவர் = வே. இராசகோபால் ஐயர்
நூலின் மூவகை பாகுபாடுகள்:
  • 1-120 = களிற்றியானை நிரை
  • 121-300 = மனிமிடைப்பவளம்
  • 301-400 = நித்திலக்கோவை
தினைப் பாகுபாடு:
  • 1,3,5,7,9 என வருவன   = பாலைத்திணை( 200 பாடல்கள்)
  • 2,8,12,18 என வருவன   = குறிஞ்சித்திணை( 80 பாடல்கள்)
  • 4,14,24 என வருவன    = முல்லைத்திணை( 40 பாடல்கள்)
  • 6,16,26 என வருவன    = மருதத்திணை( 40 பாடல்கள்)
  • 10,20,30 என வருவன   = நெய்தல் திணை( 40 பாடல்கள்)
ஒன்றுமூன்று ஐந்துஏழ்ஒன் பான்பாலை; ஓதாது
நின்றவற்றில் நான்கு நெறிமுல்லை; அன்றியே
ஆறாம் மருதம்; அணிநெய்தல் ஐயிரண்டு
கூறாதவை குறிஞ்சிக் கூற்று
பாலைவியம் எல்லாம்; பத்தாம் பனிநெய்தல்
நாலு நளிமுல்லை; நாடுங்கால் மேலையோர்
தேரும் இரண்டொட்டு இவைகுறிஞ்சி; செந்தமிழின்
ஆறு மருதம் அகம்
அகநானூறு குறிப்பிடும் அரசர்கள்:
அதியமான்
எழினி
சோழன் கரிகாலன்
பாண்டியன் நெடுஞ்செழியன்
உதியஞ் சேரலாதன்
ஆதிமந்தி
கடவுள் வாழ்த்து:
  • இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • இந்நூலில் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள் = சிவபெருமான்
பொதுவான குறிப்புகள்:
  • சோழர்களின் குடவோலைத் தேர்தல் முறையை பற்றி கூறுகிறது.
  • சங்க இலக்கியங்களுள் வரலாற்று செய்திகளை அதிகமாக கூறும் நூல் அகநானூறு.
  • பண்டைய தமிழ் மக்களின் திருமண விழ நடைபெறும் விதம் பற்றி கூறுகிறது.
  • அலெக்சாண்டரின் படையெடுப்புக்கு அஞ்சி நந்தர்கள் தமது செல்வங்களை எல்லாம் கங்கையாற்றின் அடியில் புதைத்து வைத்த செய்தி 20,25ஆம் பாடல்களில் கூறப்பட்டுள்ளது.
பாடல் அடிகள்:
  • இம்மை உலகத்து இசையோடும் விளங்கி மறுமை யுலகமும் மறுவின்றி எய்துப செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச் சிறுவர்ப் பயந்த செம்ம
  • நாவோடு நவிலா நகைபடு தீஞ்சசொல் யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வன்
  • யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னோடு வந்து கறியோடு பெயரும்
  • செந்தார்ப் பைங்கிளி முன்கை ஏந்தி இன்றுவரல் உரைமோ சென்றிசினோர் திறத்தென இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென
    மழலை இன்சொல் பயிற்றும்