#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Sunday 20 November 2016

ஏலாதி

ஏலாதியின் உருவம்:
  • ஆசிரியர் = கணிமேதாவியார்
  • பாடல்கள் = பாயிரம் 1, தற்சிறப்பாயிரம் 1, பாடல்கள் 80
  • பாவகை = வெண்பா
பெயர்க்காரணம்:
  • ஏலம், இலவங்கம், நாககேசரம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு மருந்து பொருட்கள் சேர்ந்து உடல் நோயை தீர்ப்பது போன்று இந்நூலின் உள்ள ஒவ்வொரு பாடல் கூறும் ஆறு கருத்துக்களும் மனிதனின் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும்.
பொதுவான குறிப்புகள்:
  • இவர் எழுதிய மற்றொரு நூல் = திணைமாலை நூற்றைம்பது
  • உணவு கொடுத்து ஆதரிப்போர் பெருவாழ்வு பெறுவார் என்பதை 21 பாடல்களில் கூறும் நூல்.
  • நூல் கூறும் உடலின் அறுவகைத் தொழில் = எடுத்தல், முடக்கல், நிமிர்தல், நிலைத்தல், படுத்தல், ஆடல்
மேற்கோள்:
  • தாய்இழந்த பிள்ளை தலைஇழந்த பெண்டாட்டி
    வாய்இழந்த வாழ்வினர், வணிகம் போய்இழந்தார்
    கைத்தூண்பொருள் இழந்தார் கண்இலவர்க்குஈந்தார்
    வைத்து வழங்கிவாழ் வார்
  • சாவது எளிது; அரிது சான்றாண்மை; நல்லது
    மேவல் எளிது; அரிது மெய்போற்றல்