Sunday 20 November 2016
ஏலாதி
ஏலாதியின் உருவம்:
- ஆசிரியர் = கணிமேதாவியார்
- பாடல்கள் = பாயிரம் 1, தற்சிறப்பாயிரம் 1, பாடல்கள் 80
- பாவகை = வெண்பா
பெயர்க்காரணம்:
- ஏலம்,
இலவங்கம், நாககேசரம்,
சுக்கு, மிளகு,
திப்பிலி ஆகிய ஆறு மருந்து பொருட்கள்
சேர்ந்து உடல் நோயை தீர்ப்பது போன்று இந்நூலின் உள்ள ஒவ்வொரு பாடல் கூறும்
ஆறு கருத்துக்களும் மனிதனின் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும்.
பொதுவான குறிப்புகள்:
- இவர் எழுதிய மற்றொரு நூல் = திணைமாலை நூற்றைம்பது
- உணவு கொடுத்து ஆதரிப்போர் பெருவாழ்வு பெறுவார் என்பதை 21 பாடல்களில் கூறும் நூல்.
- நூல் கூறும் உடலின் அறுவகைத் தொழில் = எடுத்தல், முடக்கல்,
நிமிர்தல், நிலைத்தல்,
படுத்தல், ஆடல்
மேற்கோள்:
- தாய்இழந்த பிள்ளை தலைஇழந்த
பெண்டாட்டி
வாய்இழந்த வாழ்வினர், வணிகம் போய்இழந்தார்
கைத்தூண்பொருள் இழந்தார் கண்இலவர்க்குஈந்தார்
வைத்து வழங்கிவாழ் வார் - சாவது எளிது; அரிது சான்றாண்மை; நல்லது
மேவல் எளிது; அரிது மெய்போற்றல்