#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Sunday 20 November 2016

கார் நாற்பது

கார் நாற்பதின் உருவம்:
  • ஆசிரியர்       = மதுரைக் கன்னங் கூத்தனார்
  • பாடல்கள்      = 40(அகநூல்களில் அளவில் சிறியது)
  • திணை          = அகத்திணை – முல்லைத்திணை
  • பாவகை        = வெண்பா
பெயர்க்காரணம்:
  • கார் = கார் காலம், மழைக்காலம்
பொதுவான குறிப்புகள்:
  • கார் நாற்பது நாடகப் பாங்கு கொண்டு அமைந்தவை.
  • அகப்பொருள் கூறும் நூல்களுள் மிகவும் சிறியது.
  • ஆசிரியரின் இயற்பெயர் = கூத்தன்
  • இவர் தனது நூலில் திருமால், பலராமன், ஆகியோரை குறிப்பிடுவதால் இவரை வைணவர் என்பர்.
  • சிவனுக்குரிய கார்த்திகை விளக்கிடுதல் பற்றியும் நூல் கூறுகிறது.
  • நூலில் கூறப்படும் துறை = வினைமேற் சென்று திரும்பும் தலைவன் பாகனோடு பேசி விரைந்து வருதல்
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒருதிணையை(முல்லை) மட்டும் பாடிய நூல்.
  • நன்னூல் உரையாசிரியர் மயிலைநாதர் இந்நூலில் மேற்கோள் சான்று காட்டியுள்ளார்.
முக்கிய அடிகள்:
  • செல்வர்  மனம்போல் கவின் ஈன்ற, நல்கூர்ந்தார்
    மேனிபோல் புல்என்ற காடு
  • தூதோடு வந்த மழை
  • பாடுவண்டு ஊதும் பருவம் பனணத்தோளி
  • வாடும் பசலை மருந்து